• எமது வெளியீடுகள்

  • Watch videos at Vodpod.
  • இது எதற்கு?

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • Blog Stats

    • 29,471 பார்வைகள்

மேற்கோள்கள்


தோழர்களே,

இந்தப் பகுதியில் தொடராக பலரது சிந்தனைகளையும், செயல்களையும் மேற்கோள்களாக பதிவிட முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

- டாக்டர் நார்மன் பெத்யூன். கனடா

1

நவீன மருத்துவ சீர்திருத்தங்களான மருத்துவ காப்பீடு திட்டங்கள் போன்றவைகள் எதுவும் சமுதாயப்பட்ட மருத்துவம் ஆகாது.  இவைகள் தேவையின் அடிப்படையில் காலங்கடந்த மனிதாபிமானத்தால் உருவான ஒழுக்கக் கேடான சோசலிசம் ஆகும்.

- டாக்டர் நார்மன் பெத்யூன். கனடா, 1937-ல்

2.

அந்தக் குழந்தை எப்படி இறந்தது? அக் குழந்தையை யார் கொன்றாரகள் என்று நான் கூறுகிறைன் . இந்த உலகம் நரகத்திற்கு போய்க்கொண்டிருக்க அதைக் கண்டுகொள்ளாமல் நம்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் நீங்கள், நான், மற்றும் அனைவரும் சேர்ந்துதான் அவளைக் கொண்றோம்.

– டாக்டர் நார்மன் பெத்யூன். கனடா, 1937-ல்

3.

“நாங்கள் அடிமைகளின் மனைவிகளாக இருப்பதற்குப் பதிலாக சுதந்திரக் போராட்ட வீரர்களின் விதவைகளாக வாழ்வோம்”

– ஸ்பெயின் மீது ஹிட்லரின் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது அப்போதைய இக்கட்டான நிலையிரும் பெண்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்கி சுமந்துகொண்டிருந்த  பேனர்களின் வாசகம். (நான்மன் பெத்யூனின் கதை என்ற புத்தகத்திலிருந்து)

4.

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும், மனித நல அக்கரையும் அப்படியே உறைந்து போய்விடாது. தெரியாது என்பதையே ஏற்றுக்கொள்ளாத மனிதர்களும், தொடர்ந்து கற்றுக்கொண்டும், தேடிக்கொண்டும் சோதனைசெய்துக் கொண்டும் உள்ள மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் புதிர்கள் இல்லை என்றாகும்வரை விட மாட்டார்கள்.

5.

தங்கள் நாட்டு மக்களுக்கான சுதந்திரத்தைக்காட்டிலும் தங்கள் சொத்துக்களைக் காத்துக் கொண்டு ஜப்பானியர்களின் காலடியில் அடிமையாக வாழ்வதைக்கூட செல்வம் படைத்தவர்கள் விரும்பினார்கள். உலகம் முழுவதும் சொத்துடைத்தவர்கள் நிலமை இதுதான்.

– டாக்டர் நார்மன் பெத்யூன். (சீனா- ஜப்பான்  போரிமுனையில் மருத்துவராக பணியாற்றியபோது )

6.

“நமக்கு என்னவென்று தெரியாதபோதுதான் நாம் அஞ்சுகிறோம். அவர்களுக்கும் எனக்கும் மற்றும் அனைவருக்கும் அதுதான் விதி. எல்லாவற்றையும்விட புரிந்துகொள்ளுதலும் சரியான அறிவுத்திறனும் சேர்ந்துதான் பயத்தைத் தோற்கடிக்கிறது.”

அவர்கள் எப்படி நான் இரத்தத்தை எடுக்கிறேன் என்பதைப் பார்க்கும்போதும் அதனால் எனக்கு எதுவும் நேரவில்லை என்பதை உணரும்போதும் அவர்களுக்கு அதனுள் எதுவும் புதிர் இருப்பதாகவும், அதனுள் எதுவும் அறிந்து கொள்ள முடியாதது இருப்பதாகவும் தோன்றாது. ஆகவே அதை முழுமையாக அறிந்த பிறகுதான் அதற்குப் பயந்து நடுங்குவதற்கு எதுவுமில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

7.

சுதந்திரத்தை விரும்பும் மில்லியன் கணக்கான கனடியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்கள் கண்களைக் கிழக்கு நோக்கித் திரும்பி ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நமது பெருமைமிகு போராட்டத்தை மரியாதையுடன் பார்கத் துவங்கியுள்ளனர். இந்த மருத்துவமனைக்கும்கூட உங்கள் வெளிநாட்டுத் தோழர்கள்தான் அனைத்து உபகரணங்களையும் தந்து உதவியுள்ளார்கள். முதலில் அவர்கள் தங்களது பிரதிநிதியாக என்னை இங்கே அனுப்பி பெருமைப் படுத்தினார்கள். உங்களைப் போன்றே சிந்திக்கும் அந்த மனிதர்கள் இங்கிருந்து 300, 000லீ தூரத்தில் இருந்துகொண்டு அதாவது இந்த பூமி உருண்டையின் பாதி தூரத்திற்கு அப்பாலிருந்து கொண்டு உங்களுக்கு உதவுவதை நீங்கள் விநோதமாகப் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் நீங்களும் நாங்களும் சர்வதேசியவாதிகள். நாம் எந்த இனம், எந்த நிறம், எந்த மொழி என்றெல்லாம் பார்ப்பதில்லை. எந்த தேசிய எல்லையும் நம்மை பிரிக்கவோ துண்டாடவோ முடியாது.

– டாக்டர் நார்மன் பெத்யூன். கனடா. (சீனப் போர்முனையில் இருந்தபோது)

8.

கருத்தரங்குகளைப் பொருத்தவரை அவைகள் மிகவும் தேவையானதும் சிறந்த தும் ஆகும். ஆனால் அவைகளைக் செயற்படுத்தினால்தான் அவை சிறந்தது. பேசிக் கொண்டிருப்பது என்பது செயற்பாட்டுக்கு மாற்றாக வராது. சொற்கள் என்பதே செயலை விளக்குவதற்குத்தான் மனிதனால் எற்படுத்தப்பட்டது


–மாடர்ன் ஆர்ட் குறித்து தமிழரசன். புதியகலாச்சாரம், மார்ச் 2011

அவர்கள் படைக்கின்ற ஓவியம், இசை, இலக்கியம் ஆகியவற்றில் புறவயமான உண்மைகள் அல்லது கருத்தியல் ரீதியான உண்மைகள் எதுவும் இருப்பதில்லை. இவை தமது கலைப்படைப்பின் உள்ளடக்கத்தை தீர்மானிக்குமாயின் தமது படைப்பு கலைத்தரம் இழந்து வெறும் பிரச்சார இலக்கியமாகிவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

-பாவேந்தர்பாரதிதாசன் 

1.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

  

—ராகுல் சாங்கிருத்தியாயன்.

1. புராதான சமுதாயத்தில் மாடு வளர்ப்பே பிரதான தொழில். ஆண் இதன் மூலம் வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவனாக இருந்தான். வீட்டுவேளை மாடுவளர்ப்புக்கு உதவிப்பணியாக இருந்த து .இந்த எண்ணம் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. “உனக்கென்ன, வீட்டுக்குள்ளே நீ ஹாய்யா உட்காரந்திருக்கிறாய்! வேளியே போய்க் கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பதென்பது உனக்கெப்படித் தெரியும்” என்று பேச்சு வந்தால் ஆண் பெண்ணிடம் கத்திக்கொண்டிருந்தான். உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணே அதிக நேரம் உழைக்கிறாள்; அதிகமாக கவலைப்படுகிறாள். இந்த விஷயத்தில் மேல்தட்டு சோம்பேறிப் பெண்ணை விட்டுத்தள்ளுங்கள்.

பெண்களுக்கு வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதித்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படாதவரையிலும் அவளை நான்கு சுவர்களுக்கிடையே “ராணி”யாக அடைத்து வைத்திருக்கும் வரையிலும் பெண்ணக்கு விடுதலைக் கிடைக்காது; சமுதாயத்திலும் அவளுக்கு சம உயர்வு கிடைக்காது. பெண் எவ்வித தடையும் இல்லாமல் வாழ்க்கைத் தேவைகளுக்கான உற்பத்தியில் ஈடுபடும்போதே, அவளுக்கு வீட்டு வேளைகள் பெயரளவுக்கு இருக்கும் போதே ‘பெண் விடுதலை’ நடைமுறைக்கு வரும்.

2. தனிச் சொத்துரிமை என்ற அமைப்பின் அடிப்படையில் அருவருக்கத்தக்க பேராசை, கருணையற்ற கல்மனம், மோசமான போட்டி, சமுதாயத்தின் செல்வத்தைச் சுயநலத்திற்காக கொள்ளையடித்தல் என்பவையே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆசான் காரல் மார்க்ஸ்

1.

மதம் மனிதனை, அவனது போராட்ட உணர்வு வேகத்தை தடுத்து முடக்கி விடுகிறது. அது தாழ்வுணர்ச்சியையும், கீழ்படியும் மனப்பான்மையையும் ஊட்டி வளர்க்கிறது. இறுதியில் இன்று நிலை கொண்டுள்ள அமைப்பு முறையை ஒப்புக்கொள்ளச் செய்கிறது. அதே சமத்தில் குறுகிய மனப்பான்மை படைத்த வெறியை உண்டாக்குகிறது. இதர கோட்பாட்டாளர்கள் மீது எவ்வித சகிப்பும் இல்லாமல் சாகும் குணத்தை அதாவது வேறு வெளிச்சத்தில் பார்ப்பவர்களைக் கண்டு சகிக்காத நிலையை உண்டாக்குகிறது.

இந்த சமய சார்பற்ற உலகியல் சார்பின் அஸ்திவாரத்திலேயே உள்ள முரண்பாடுகளில் இருந்துதான், சமுதாய பகைமைகளிலிருந்துதான் மதம் வெளிப்பட்டு தோன்றியது. எனவே மதத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் இன்றைய நிலையிலுள்ள சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுவது ஒன்றே வழி.

2. முதலாளித்துவவாதி ஒரு புத்திசாலி கஞ்சன்.

ஃபிரெடெரிக்ஏங்கல்ஸ் :

அறிவியலை வணங்குபவர்கள் கம்யூனிஸ்கள்.

பெஞ்சமின்ஃபிராங்களின் :

சர்சுகளின் கோபுரங்களை விட கலங்கரைவிளக்கத்தின் கோபுரங்கள் மிகவும் பயனுள்ளதாகும்.

( மசூதிகள், கோயில்கள் ஆகியவற்றின் கோபுரங்களும் பயனற்றதுதான். )

பெயர் தெரியாத சிலர்

பெருமை கொண்டது கிளி சருகுகளால் “கூடு” கட்டிய குருவியை பார்த்து தான் இருப்பது தங்க”கூண்டு” என்று.

கடவுட்கோட்பாட்டை, ஆத்திகர்களைவிட நாத்திகர்களே சரியாகப்புரிந்து கொள்கின்றனர்.

நீங்கள் கடவுளின் முழுநம்பிக்கையாளர் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் கடவுளின் விசுவாசிகளாக நீங்கள் இல்லை.

நான் உங்களுக்கு கடவுள் நம்பிக்கையாளனாகத் தெரியலாம். ஆனால் கடவுளுக்கு, அவனது விசுவாசத்திற்கு எதிரானவன் நான்.

தராசு தட்டுகளை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள். அங்கே புறாவின் மாமிசத்தை சிபிகள் உண்ண ஆரம்பித்துவிட்டனர்

பல மூங்கில்கள் வளைக்கப்படும் அவசரத்தில்
முறிக்கப்பட்டு  விட்டதால்
விற்பனை ஆயின விரகுக்கடையில்

மாவோ :

1) ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வர்கத்தின் உறுப்பினராகவே வாழ்கிறார்கள். ஒவ்வொரு சிந்தனையிலும் விதி விலக்கின்றி ஒரு வர்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

2) தொல்லை கொடுப்பது, தோல்வி அடைவது, மீண்டும் தொல்லை  மீண்டும் தோல்வி…. தமது அழிவு வரை இது மக்களின் இலட்சியத்தை கையாள்வதில் ஏகாதியபத்தியவாதிகளும் பிற்போக்குவாதிகளும் மேற்கொள்ளும் தர்க்கம். அவர்கள் ஒருபோதும் இந்த தர்க்கத்திற்கு விரோதமாக செல்ல மாட்டார்கள். இது ஒரு மார்க்ஸிய விதி. “ஏகாதிபத்தியம் பயங்கரமானது” என்று நாம் கூறும்போது, அதன் இயல்பு ஒருபோதும் மாறாது. ஏகாதிபத்தியவாதிகள் தமது கசாப்புக் கடைக் கத்திகளை கீழே போடமாட்டார்கள். தாம் அழியும் வரை புத்தர்களாக மாறமாட்டார்கள் என்று நாம் கருதிகிறோம்.

     போராட்டம் தோல்வி, மீண்டும் போராட்டம், மீண்டும் தோல்வி மீண்டும் போராட்டம்… தமது வெற்றி வரை இதுதான் மக்களின் தர்க்கம். அவர்களும் இந்த தர்க்கத்திற்கு எதிராக செல்ல மாட்டார்கள். இது இன்னொரு மார்க்ஸிய விதி.. ருஷிய மக்களின் புரட்சி இந்த விதியைப் பின்பற்றியது. அப்படியே சீன மக்களின் புரட்சியும் இவ் விதியைப் பின்பற்றுகிறது.

‘பிரமைகளை வீசி எறிந்து போராட தயாராகுங்கள்’ என்ற தலைப்பில் மாவோ ஆற்றிய உரை. (14 ஆகஸ்ட் 1949).

மகத்தான நிர்மாண வேலையில் மிகக் கடினமான கடமைகள் நம் முன் இருக்கின்றன. நமது கட்சியில் ஒரு கோடிக்கு மேலான உறுப்பினர்கள் இருந்த போதிலும், நாட்டின் முழு மக்கட் தொகையில் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே ஆவார். நமது பல்வேறு அரசாங்க நிறுவனங்களிலும் பெருமளவு வேலைகள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களால் செய்யப்பட வேண்டியிருக்கின்றன. நாம் பொதுமக்களை சார்ந்து நிற்பதிலும், கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களுடன் ஒத்துழைப்பதிலும் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாள், இந்த வேலைகளை நன்றாக செய்வது சாத்தியமல்ல. கட்சி முழுவதின் ஐக்கியத்தை தொடர்ந்து பலப்படுத்தும் அதே வேளையில், நமது தேசிய இனங்கள், ஜனநாயக வர்க்கங்கள், ஜனநாயக கட்சிகள், மக்கள் நிறுவனங்கள் எல்லாவற்றின் ஐக்கியத்தையும் தொடர்ந்து பலப்படுத்தி, நமது மக்கள் ஜனநாயக முன்னணியையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும். நமது வேளையில் எந்த தொடரிலும் , கட்சிக்கும் மக்களுக்கும் இடையே ஐக்கியத்தை ஊறுபடுத்தும் ஆரோக்கியமற்ற எல்லா வெளிப்பாடுகளையும் நாம் உணர்வு பூர்வமாக இல்லாமல் செய்ய வேண்டும்.


மாவோ – சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8ஆவது தேசிய மாநாட்டில் ஆரம்ப உரை. 15 செப்தம்பர் 1956.



4 பதில்கள்

  1. இறைவன் செயல்@ தற்செயல்

    இப்பிரபஞ்ச ஆக்கமும் அழிவும் அதற்குட்பட்ட அதிகாரமும் அனைத்தும் ஆத்திக நம்பிக்கையாளரின் “எல்லாம் இறைவன்செயல்” என்ற கருத்தியலாகவும்,இப்பிரபஞ்ச ஆக்கமும் அழிவும் அதற்குட்பட்ட அனைத்தும் நாத்திக நம்பிக்கையாளரின் “எல்லாம் தற்செயல்” என்ற கருத்தியலும் இங்கு பிரித்து ஆயப் /மேயப்படுகிறது.

    பிரபஞ்சமும் உயிரின தோற்றமும் இறைவனின் செயலாகும். ஆம். உருவமான இறைவனோ அல்லது அருவமான இறைவனோ தான்தோன்றியாக தன்னை சுயமாக எந்த மூலமும் அல்லாத சூனியத்திலிருந்து உருவாக்கம் செய்யும் வல்லமைபெற்ற சக்தியாகவும் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள உயிரற்ற மற்றும் உயிருள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து பின் தன் இருக்கையை அரியாசனத்தில் அமைத்து அதில் அமர்ந்து கொண்டு மும்மூர்த்தியாக முழுமுதல் கடவுளாக வீற்றுக்கொண்டு படைத்தல் காத்தல் அழித்தல் என நிகழ்த்தி அனைத்தின் விதியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தும் வருவதாகவும் அதனை முறையே இறைவனின் செயல் தான் அகில அண்டசராசரங்களின் நிர்வாகமும் அவன் கிருபையே திருவிளையாடலே எட்டுத்திக்கும் என்ற வழக்காடல் சொல்லாடல் மனிதனிடையே பாரம்பரிய வாரிசுரிமை சொத்தாக மௌட்டீக பாணியில் வலம் வருவது அனைவரும் அறிந்தது. ஆனால் அந்த கூப்பாடும்அதன் பொய்மொழி கோட்பாடும் ஆய்ந்து அறிய வாய்ப்பில்லாமலும் நிருபணம் செய்யவும் இயலாத வெற்று தத்துவமாக கடைப்பிடிக்கப்பட்டு வாழையடி வாழையாக பின்பற்றப்பட்டும் வருவது நாமறிந்ததே.வெகு காலமாக இக்கோட்பாடு எண்ணவடிவிலே சுழன்று வருகிறது.இதையே ஒரு கருத்தின் மீது கொண்ட காதலாகவும் அதைப்பற்றி விளக்க முற்படுவதும் போது அந்த நம்பிக்கையின் மீது நாம் கொண்ட மோதலாகவும் செயல்படுவது சீரிய சிந்தனையாளருக்கு மட்டும புரியும். அதையே “மதம்” என்ற பதத்தில் மக்கள் நம்புவர். அதாவது ஒன்றின் மேல் அசைக்க முடியாப்பற்று கொண்டும் அறிவின் மேல் இடப்பட்ட திரையாக ஆய்ந்தறியாலாகாத தன்மையை மடமை என்றும் கூறுவர்.

    அல்ல !அல்ல ! இவ்வுலகை இறைவன் என்ற ஒருவன் படைக்கவில்லை.ஏனெனில் இறைவனென்று ஒன்று இப்பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கவில்லை.அதை அறிய இயலாது. ஆய்வுக்கு உட்படுத்தமுடியாது. அது ஒரு கருத்தியல் புலனறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு அழகிய மடமை. அது அறிவுக்கு ஒவ்வாமை தரும்.அப்படியே ஒருவன் இருக்க சாத்தியமோ அதற்கு நாத்திக சாஸ்திரத்தில் விதி என்ற ஒன்றோ கிடையாது. அப்படி இருக்க இறைவன் படைத்தான் எனில் அவனையும் ஒருவன் படைத்திருக்க வேண்டும். அப்படி ஒன்று இந்த லோகத்தில் இடம் பெறவில்லை. எங்களது நாத்திக கடவுளர்களான மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் அதை மறுக்கின்றனர்.ஆகவே அவர்களும் நாத்திக சாஸ்திர தோத்திர வேத முறைப்படி எந்த ஒரு கடவுளும் லோகத்தில் சஞ்சரிக்கவில்லை. பிரபஞ்சத்தில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. அப்படி இருப்பின் அவர் ஒரு பொருளாகவோ அல்லது அருளாகவோ எழுந்தருளி உற்சவ மூர்த்தியாக அவதரிப்பார். திக்கெட்டும் சஞ்சரிப்பார். ஆகவே அவரை மதவாதிகள் இதுவரை தேடிய பணியில் அவரைப்பிடித்து எங்களிடம் நிறுத்தி நிறுவவில்லை.அவரை தொட்டும் முகர்ந்தும் பேசியும் பார்க்கவியலாதால் நாம் அவரை அவர் தன் இருப்பை ஏற்க மாட்டோம். எப்போது எம்முன் பொருளாக எழுந்தருளி எம்புலனுக்கு பொருந்தும் வண்ணம் காட்டமுடியுமோ அப்போது அக்கடவுளை நாம் ஏற்கத்தயார்.அதுவரை நாம் அவரை எங்கள் வருங்கால ஆச்சாரியகளும் ஆசான்களும் கதைக்கும் வரை நம்ப மாட்டோம் ஏற்க மாட்டோம். எந்த ஒன்றும் தானாக உருவாக இயலாது என்ற கிருத்தக வித்தக நாத்திக தோழர்களின் கட்டளைக்கு அடிசாய்ந்து அடுத்த அறிவியலாரின் இறைவன் இருப்பை பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை காத்திருப்போம்.கண்கள் பூத்திருப்போம். ஆகவே இப்பிரபஞ்சம் தற்செயல் என்றும் நம்புவோம்.

    மேற்கண்ட இந்த கருத்தியலான நாத்திகவாதத்தை மதம் சாரா மதம் சார்த்தோர் கதைப்பதும் மக்களறிந்த ஒன்றே.நாத்திக நம்பிக்கையாளரின் கருத்தாவது.”இப்பிரபஞ்சம் மற்றும் பூமியின் உயிர்ச் சூழல் தற்செயலானது”
    பெருமூளையின் செயல்பாடுகளை தவிர்த்தும் சிறு மூளையினை மட்டுமே உபயோகிக்கும் அதை பிரயோகிக்கும் மதவாதிகளின் செயலோடு ஒப்ப்பிடுகையில் பெரு மூளையின் பெரும்பகுதியை கொண்டு பெரும் பெரும் ஆய்வுகள் ஆராய்சிகள் என்று தங்கள் வாழ் நாளையே வீண் செய்த எங்கள் ஆச்சாரியர்களும் ஆசான்களும் அறிஞர்களும் கண்டுபிடித்த தத்துவ மார்க்கமான நாத்திகமே மானுடத்தின் துடர் இடர் நீக்கும் அரு மருந்து சர்வ ரோஹ நிவாரணி எனக்கதைக்கும் நாத்திகர்களும் அவர்களின் மயக்க தத்துவமான எல்லாம் தற்செயல் என்பது அறிவுடமையாகாது. மாறாக மதவாத கிறுக்கர்களின் செயலான மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சிலை காறித்துப்பும் செயலோடு ஒப்புநோக்கையில் நாத்திகனின் செயல் அதனினும் மிகுத்து தலைகீழாக நின்று கொண்டு ஜலத்தையும் மலத்தையும் கழிவதுபோல் உள்ளது.

    மதவாதிகளின் கருத்தை வேறு வழியில் மொழியும்
    “தற்செயல்” என்ற பதம் கருத்தியல் வியுகமாகும். உயிரினத்தோற்றம் தற்செயல் அல்ல. மாறாக அணுக்களின் இயற்பியல் தன்மையும் சூழ்நிலையின் தாக்கமும் கிளர்ச்சியும் இடம்பெறும்போது அதனை நிவர்த்திசெய்ய அதில் தேற தன் இயற்தன்மையை காக்க வேதி வினை புரிவது தவிர்க்கவியலாதது. உயிரினம் வளர்ச்சி,இனப்பெருக்கம் என்ற ஆக்கமும் இனச்சுருக்கம் என்ற அழிவும்,உயிராகவும் உயிரற்றதாகவும் அகத்தாலும் புறத்தாலும் சூழ்நிலையால் நிர்மாணிக்கப்படுகிறது.ஆகவே தற்செயல் என்று ஒன்றில்லை.ஒவ்வொரு அணுவும் தன் இயற்பியல் விதிக்குட்பட்டு செயல்படுகிறது என்றால் மிகையாகாது.

    quranist@aol.com

  2. 2:163, There is no god but He,

    எக்கடவுளுமில்லை அப்படி ஒன்றைத்தவிர !!!

    இயற்கை என்ற இயற்பியல் விதியல்லாத

    வேறு ஒரு இறைவனில்லை என உறுதிப்படுத்த குரான் வாசகங்கள்.

    1. 2:163
    2. 2:255
    3. 3:2
    4. 3:6
    5. 3:18
    6. 3:62
    7. 4:87
    8. 5:73
    9. 6:102
    10. 6:106
    11. 7:59
    12. 7:65
    13. 7:73
    14. 7:85
    15. 7:158
    16. 9:31
    17. 9:129
    18. 10:90
    19. 11:14
    20. 11:50
    21. 11:61
    22. 11:84
    23. 13:30
    24. 16:2
    25. 20:8
    26. 20:14
    27. 20:98
    28. 21:25
    29. 21:87
    30. 23:116
    31. 27:26
    32. 28:70
    33. 28:88
    34. 35:3
    35. 37:35
    36. 38:65
    37. 39:6
    38. 40:3
    39. 40:62
    40. 40:65
    41. 44:8
    42. 47:19
    43. 64:13
    44. 73:9

    quranist@aol.com

  3. //பெரு வெடிப்பும் பெரு வெடிப்பின் முடிவான பெரும் சுருங்குதல்//

    Big Bang
    Big Rip
    Big Crunch
    Big Bounce
    Big Freeze
    Big Contraction

    21:030. the Space and its Mass were one single entity, We then parted asunder?

    21;104.roll up the Space as written scrolls are rolled up. Then, just as We initiated the first , We shall produce a new one (a new Universe).

    quranist@aol.com

  4. கடவுள் யார் ?

    கிரகமா ?

    சந்திரனா ?

    சூரியனா ?

    அப்ரஹாமின் ஆய்வு பின்வருமாறு:

    6:75 .Thus We revealed Abraham the Theory of Space and its Mass Administration, so that he will be of those who have certainty.

    6:76 .When the night covered him, he saw a planet, and he said, “This is my Lord.” But when it disappeared he said, “I do not like those that disappear.”

    6:77. So when he saw the moon rising, he said, “This is my Lord.” But when it disappeared he said, “If my Lord will not guide me, then I will be amongst the wicked people!”

    6:78 .So when he saw the sun rising, he said, “This is my Lord, this is bigger.” But when it disappeared he said, “My people, I am innocent of what you have set up.”

    6:79 .”I shall turn my face to the One who evolved the space and its mass, as a monotheist, and I am not of those who set up partners.

    6:80 .His people argued with him. He said, “Do you argue with me regarding God, when He has guided me? I do not fear what you have set up except if my Lord wishes it so; my Lord encompasses all things with physical laws; will you not remember?”

    quranist@aol.com

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 63 other followers